inner others news

டெங்கு நோய் என்பது வைரஸ் மூலம் பரவுகின்ற ஒரு நோய் என்பதுடன் நோய்த்தொற்றுள்ள ஒரு நுளம்பு காவியாக செயற்படுகிறது. கட்டமைப்பு ரீதியாக இது மிகச் சமமான போதும் நோயைப் பரப்புவதில் வித்தியாசமான வைரஸ்கள் செயற்படுகின்றன. (DEN 1, DEN 2 , DEN 3,  DEN 4)
டெங்கு தொற்றுவதன் மூலம் ஏற்படும் நோய் நிலைமைகள் மிகப் பெரிய வீச்சினுள் விரிந்து செல்வதுடன் சில நபர்களிடம் எந்தவித நோய் அறிகுறிகளும் தென்படமாட்டாது என்பதுடன் இன்னும் சிலரிடம் நோய் அறிகுறிகள் தென்படும். நோய் அறிகுறிகளைக் கொண்ட நபர்களுள் பெரும்பாலானவர்களிடம் சாதாரன வைரஸ் காய்ச்சல் நிலைமை, டெங்கு காய்ச்சல் அல்லது அசாதாரண நோய் அறிகுறிகளுடன் கூடிய டெங்கு குருதிப்பெருக்கு நிலைமை ஏற்பட முடியும். டெங்கு காய்ச்சல் காரணமாக ஆகக் கூடுதலாக காணக்கிடைப்பது டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு குருதிப்பெருக்கு நிலைமை என்பதுடன் அசாதாரண நோய் அறிகுறியுடன் கூடிய டெங்கு நோய் நிலைமைகள் மிக அபூர்வமாகவே நிகழ்கிறது. (< 1%)

  • டெங்கு காய்ச்சல் – டெங்கு காய்ச்சலின் போது ஒரேயடியாக ஏற்படும் கடுமையான காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் பின்புறக் கண்களில் வலி, மூட்டுக்களிலும் தசைகளிலும் வலி என்பன பெரும்பாலும் ஏற்படுவதுடன் சில நோயாளர்களுக்கு சிவப்பு நிற பரந்துபட்ட தன்மையில் கொப்புளங்கள் மற்றும் சில வேளைகளில் குருதி கசியும் நிலைமைகள் ( முரசுகளிலிருந்து, மூக்கிலுருந்து, சளி மற்றும் தோல் என்பவற்றிலிருந்து).
  • டெங்கு குருதிப்பெருக்கு – டெங்கு குருதிப்பெருக்கு, டெங்கு தொற்றின் உச்சக் கட்ட நோய் நிலைமை ஆவதுடன் மிகவும் சிறிய எண்ணிக்கையான நோயாளர்களுக்கு இந் நிலைமை ஏற்படுகிறது. டெங்கு குருதிப்பெருக்கு நோயின் போது பெரும்பாலும் தெளிவாக வித்தியாசப்படுத்தி இனங் காண முடியுமான 3 கட்டங்கள் காணப்படுவதுடன் அவை, காய்ச்சலுடன் கூடிய கட்டம் (இக் கட்டத்தின் போது 7 தினங்களுக்கு குறைவாகக் காணப்படும் கடுமையான காய்ச்சலுடனான காலம்), நெருக்கடியான கட்டம் (நெருக்கடியான கட்டம் ஆரம்பமாவது திரவவிழையம் கசிய ஆரம்பித்தல் மற்றும் சதாதாரணமாக காய்ச்சல் தணிந்து செல்லலுடனேயாகும்) இந் நிலைமை 1-2 தினங்கள் வரையான காலத்திற்கு காணப்படுவதுடன் ஏற்கனவே இனங் கண்டு தேவையான அக்கறை செலுத்தப்படாமையால் நோயாளி அதிர்ச்சி நிலைமைக்கு கூட ஆளாகலாம். குணமடையும் கட்டம், 2-5 தினங்கள் வரையான காலத்திற்கு காணப்படுவதுடன் இக் கால கட்டத்தில் நோயாளியின் உணவு மீதான விருப்பம் அதிகரிக்கும், இதயத் துடிப்பு குறைவடையும். குணமடையும் சந்தர்ப்பத்திற்கே உரித்தான கொப்புளங்கள் (சிவப்பு நிற பின்னணியில் வௌ்ளை நிற கொப்புளங்கள்) பெரும்பாலும் உடல்பூராக அரிப்புணர்ச்சி காணப்படும். (உள்ளங்கையிலும் அடியிலும் அதிகமாகக் காணப்படும்) இவ் வேளையில் அதிகமாக சிறுநீர் கழிக்கவேண்டியேற்படும்.

நோயாளியிடம் பின்வரும் நோய் அறிகுறிகள் தென்படுமாயின் (விசேடமாக காய்ச்சல் குறைகின்ற வேளையில்) கட்டாயமாக வைத்தியரின் அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

  • தொடர்ச்சியாக வாந்தியெடுத்தல்
  • வயிற்று வலி  
  • கடுமையான தாகம்
  • கடுமையான தூக்கமும் மயக்க நிலைமையும்
  • உணவு மீதுள்ள வெறுப்பு
  • அசாதாரண குருதி வடியும் நிலைமை உதா: மாதவிடாய்ச் சுற்றின் போது அதிகமான குருதிப்பெருக்கு இடம்பெறல், குறித்த தினத்திற்கு முன்னர் மாதவிடாய்ச் சுற்று இடம்பெறல்.

நோயாளியிடம் பின்வரும் நோய் அறிகுறிகள் காணப்படுமிடத்து உடனடியாக வைத்திய அறிவுரை பெற்றுக்காள்ளப்படல் வேண்டும்.

  • கைகால்களில் குருதியற்ற மற்றும் குளிரான தன்மை
  • அமைதியின்மை மற்றும் குழப்ப நிலைமை
  • தோலின் நிறம் மாற்றமடைதல்
  • சிறுநீர் வெளியேறாமை அல்லது குறைவாக சிறுநீர் வெளியேறல்
  • நடத்தையில் மாற்றம் – மயக்கம்/ இழிவான வார்த்தைப் பிரயோகம்

டெங்கு நோய் நிலைமையினை முன்னரே இனங்காணல் 

டெங்கு நோயினை முன்னரே இனங்கண்டு உரிய சிகிச்சையளிப்பதன் மூலம் டெங்கு நோயின் சிக்கலான மற்றும் குணப்படுத்த முடியாத நிலைமையினைக் குறைத்துக்கொள்ள முடியும். இலங்கையில் தற்போது நிலவும் டெங்கு அதி நிறமூர்த்த நிலைமையின் கீழ் காய்ச்சலுடன் பின்வரும் நோய் அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளர்கள் டெங்கு நோயினால் (டெங்கு காய்ச்சல்/ டெங்கு குருதிப்பெருக்கு) அவதிப்படுவதாக சந்தேகித்து தேவையான அவதானத்தைச் செலுத்துவது அத்தியவசியமாகும் 
கடுமையான தலைவலி, கண்களின் கீழ் பகுதியில் வலி, எலும்பு மற்றும் தசைகளில் வலி, உடம்பில் மேலெழும்பும் கொப்புளங்கள் (விரிவடைந்த தன்மையிலுள்ள சிவப்பு நிற கொப்புளங்கள்), சிறிய அளவிலான குருதிவடிதல் நிலைமைகள் (தோலின் மேற்பகுதியில் மற்றும் குருதி கணிப்பீட்டு பரிசோதனை மூலம் காட்டப்பட முடியுமானவாறு), வெண்குருதியணுக்கள் குறைவடைதல் (<5000/mm3), குருதிச் சிறுதட்டுக்கள் ≤150,000/mm3 , குருதியின் செறிவத் தன்மை அதிகரித்தல் (5 – 10%) 
சில சந்தர்ப்பங்களில் இருமல், தடிமன் மற்றும் தொண்டை வலி போன்ற மூச்சுக் குழலை அண்மித்த நோய் அறிகுறிகளுடன் கூடிய மற்றும் மலச்சிக்கல், வயிற்றோட்டம், வாந்தி, இடைக்கிடை ஏற்படும் வயிற்று வலி போன்ற உணவுக் கலன்சார்ந்த நோய் அறிகுறிகளுடன் டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைக்கு சமூகமளிக்க இடமுண்டு. 

கடுமையான காய்ச்சலுடன் கூடிய ஒரு நோயாளியின் முகம் மற்றும் கைகால்கள் சிவப்பு நிறத்தில் பரவிய தழும்களுடன் கூடிய தன்மையில் காணப்படல், வெண்குருதியணுக்களின் அளவு குறைவடைதல், (அதிர்ச்சி நிலைமையில் வருகை தரும் ஒரு நோயாளி விசேடமாக காய்ச்சல் இன்றி, கைகால்கள் குளிராக, இதயத் துடிப்பு வேகமாக நாடித் துடிப்பு மற்றும் குறைவான இரத்த அமுக்கத்துடன் காணப்படின் டெங்கு அதிர்ச்சி நிலைமை என சந்தேகித்தல் வேண்டும்.

NS 1 நோய் எதிர்ப்பு நோய்தொற்றியுள்ள ஒரு நோயாளியிடம் காய்ச்சலின் ஆரம்ப கட்டத்தில் குருதிப் பரிசோதனையின் மூலம் கண்டறிய முடியுமான புதிய இரசாயனப் பரிசோதனையாவதுடன் அதன் மூலம் நோயாளிக்கு டெங்கு தொற்றியுள்ளதாக மாத்திரம் கண்டுபிடிக்க முடியும். ஆயினும் நோயாளிக்கு டெங்கு காய்ச்சல் அல்லது டெங்கு குருதிப்பெருக்கு தொற்றியிருப்பதாக வேறுபடுத்தி இனங் காண்பதற்கு இப் பரிசோதனை மூலம் அவகாசம் கிடைப்பதில்லை. இதன் காரணமாக டெங்கு நோய் என்பதாக ஆரம்ப கட்டத்தில் சந்தேகத்திற்கிடமான வேளைகளில் மாத்திரம் இப் பரிசோதனையினை மேற்கொள்ளல் பயனளிக்க முடியும்.  

பூரணமான குருதிப் பரிசோதனை மேற்கொள்வதன் முக்கியத்துவம்

  • காய்ச்சல் ஏற்பட்டு மூன்றாவது தினத்தில் அனைத்து நோயாளர்களுக்கும் பூரணமான குருதிப் பரிசோதனை மேற்கொள்ளுதல் அத்தியவசியமாகும்.
  • ஒருசில விசேட நோயாளர்களிக்கு முதலாவது தினத்தில் அல்லது முதல் தடவையாக சிகிச்சைக்காக வருகை தந்த சந்தர்ப்பத்திலேயே குருதிப் பரிசோதனையொன்று மேற்கொள்ளப்படல் வேண்டும்.(கர்ப்பிணிப் பெண்கள், ஒரு வயதுக்கு குறைந்த பிள்ளைகள், முதியவர்கள் மற்றும் ஏனைய காலங்கடந்த நோயினால் பீடிக்கப்பட்டுள்ள நபர்கள்)
  • குருதிச் சிறுதட்டுக்களின் அளவு ≥150,000/ mm3 எனின் மூன்றாவது தினத்திலிருந்து நாளாந்தம் பூரண குருதிப் பரிசோதனை மேற்கொள்ளல் அத்தியவசியமாகும்.
  • குருதிச் சிறுதட்டுக்களின் அளவு ≤150,000/ mm3 எனின் நாளொன்றுக்கு இரு தடவைகள் பூரண குருதிப் பரிசோதனை மேற்கொள்ளல் அத்தியவசியமாகும் (நோயாளியின் சிகிச்சை நிலைமை, அபாயமான நோய் அறிகுறிகளைக் காட்டுதல் மற்றும் ஏனைய சமூகக் காரணிகள் என்பவற்றின் காரணமாக நோயாளியை வைத்தயசாலையில் அனுமதிக்கும் தேவைப்பாடு தங்கியுள்ளது)
  • குருதிச் சிறுதட்டுக்களின் அளவு ≤100,000/ mm3 ஆகக் காணப்படும் வேளைகளில் நோயாளியை வைத்தயசாலையில் அனுமதிப்பது அத்தியவசியமாகும்